குறள்: 249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.
When souls unwise true wisdom's mystic vision see,The 'graceless' man may work true works of charity
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom
| குறள் எண்: | 249 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அருளுடைமை |
| இயல்: | துறவறவியல் |