குறள்: 161ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு.
As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
| குறள் எண்: | 161 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அழுக்காறாமை |
| இயல்: | இல்லறவியல் |