குறள்: 165அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்காயும் கேடீன் பது.

Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate

மு.வரதராசன் உரை

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்

கலைஞர் உரை

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்

Explanation

To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction

Kural Info

குறள் எண்:165
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அழுக்காறாமை
இயல்:இல்லறவியல்