குறள்: 168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.

Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain

மு.வரதராசன் உரை

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

கலைஞர் உரை

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

Explanation

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

Kural Info

குறள் எண்:168
Category:அறத்துப்பால்
அதிகாரம்:அழுக்காறாமை
இயல்:இல்லறவியல்