குறள்: 49அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
The life domestic rightly bears true virtue's name;That other too, if blameless found, due praise may claim
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்
The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach it
| குறள் எண்: | 49 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | இல்வாழ்க்கை |
| இயல்: | இல்லறவியல் |