குறள்: 10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.
They swim the sea of births, the 'Monarch's' foot who gain;None others reach the shore of being's mighty main
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
None can swim the great sea of births but those who are united to the feet of God
| குறள் எண்: | 10 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கடவுள் வாழ்த்து |
| இயல்: | பாயிரவியல் |