குறள்: 2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.

No fruit have men of all their studied lore,Save they the 'Purely Wise One's' feet adore

மு.வரதராசன் உரை

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் உரை

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

Explanation

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

Kural Info

குறள் எண்:2
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கடவுள் வாழ்த்து
இயல்:பாயிரவியல்