குறள்: 5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

The men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well

மு.வரதராசன் உரை

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

சாலமன் பாப்பையா உரை

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

கலைஞர் உரை

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

Explanation

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

Kural Info

குறள் எண்:5
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கடவுள் வாழ்த்து
இயல்:பாயிரவியல்