குறள்: 272வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்தான்அறி குற்றப் படின்.

What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault

மு.வரதராசன் உரை

தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை

தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?

கலைஞர் உரை

தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை

Explanation

What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin

Kural Info

குறள் எண்:272
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கூடா ஒழுக்கம்
இயல்:துறவறவியல்