குறள்: 277புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமுக்கிற் கரியார் உடைத்து.

Outward, they shine as 'kunri' berry's scarlet bright;Inward, like tip of 'kunri' bead, as black as night

மு.வரதராசன் உரை

புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

சாலமன் பாப்பையா உரை

குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

கலைஞர் உரை

வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு

Explanation

(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry

Kural Info

குறள் எண்:277
Category:அறத்துப்பால்
அதிகாரம்:கூடா ஒழுக்கம்
இயல்:துறவறவியல்