குறள்: 115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்கோடாமை சான்றோர்க் கணி.
The gain and loss in life are not mere accident;Just mind inflexible is sages' ornament
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)
| குறள் எண்: | 115 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நடுவு நிலைமை |
| இயல்: | இல்லறவியல் |