குறள்: 116கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.

If, right deserting, heart to evil turn,Let man impending ruin's sign discern

மு.வரதராசன் உரை

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

கலைஞர் உரை

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்

Explanation

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."

Kural Info

குறள் எண்:116
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நடுவு நிலைமை
இயல்:இல்லறவியல்