குறள்: 118சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.

To stand, like balance-rod that level hangs and rightly weighs,With calm unbiassed equity of soul, is sages' praise

மு.வரதராசன் உரை

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

கலைஞர் உரை

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்

Explanation

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise

Kural Info

குறள் எண்:118
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நடுவு நிலைமை
இயல்:இல்லறவியல்