குறள்: 119சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.

Inflexibility in word is righteousness,If men inflexibility of soul possess

மு.வரதராசன் உரை

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

சாலமன் பாப்பையா உரை

மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

கலைஞர் உரை

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

Explanation

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind

Kural Info

குறள் எண்:119
Category:அறத்துப்பால்
அதிகாரம்:நடுவு நிலைமை
இயல்:இல்லறவியல்