குறள்: 139ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.

It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill

மு.வரதராசன் உரை

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

கலைஞர் உரை

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

Explanation

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully

Kural Info

குறள் எண்:139
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஒழுக்கம் உடைமை
இயல்:இல்லறவியல்