குறள்: 148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life

மு.வரதராசன் உரை

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

கலைஞர் உரை

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

Explanation

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great

Kural Info

குறள் எண்:148
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பிறனில் விழையாமை
இயல்:இல்லறவியல்