குறள்: 186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.

Who on his neighbours' sins delights to dwell,The story of his sins, culled out with care, the world will tell

மு.வரதராசன் உரை

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

கலைஞர் உரை

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்

Explanation

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published

Kural Info

குறள் எண்:186
Category:அறத்துப்பால்
அதிகாரம்:புறங்கூறாமை
இயல்:இல்லறவியல்