குறள்: 101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.

Assistance given by those who ne'er received our aid,Is debt by gift of heaven and earth but poorly paid

மு.வரதராசன் உரை

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது

கலைஞர் உரை

``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா

Explanation

(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received

Kural Info

குறள் எண்:101
Category:அறத்துப்பால்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
இயல்:இல்லறவியல்