குறள்: 103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.

Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea

மு.வரதராசன் உரை

இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

சாலமன் பாப்பையா உரை

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

கலைஞர் உரை

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது

Explanation

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea

Kural Info

குறள் எண்:103
Category:அறத்துப்பால்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
இயல்:இல்லறவியல்