குறள்: 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார்.
Each benefit to those of actions' fruit who rightly deem,Though small as millet-seed, as palm-tree vast will seem
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit
| குறள் எண்: | 104 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | செய்ந்நன்றியறிதல் |
| இயல்: | இல்லறவியல் |