குறள்: 106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.

Kindness of men of stainless soul remember evermoreForsake thou never friends who were thy stay in sorrow sore

மு.வரதராசன் உரை

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

சாலமன் பாப்பையா உரை

உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

கலைஞர் உரை

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது

Explanation

Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless

Kural Info

குறள் எண்:106
Category:அறத்துப்பால்
அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
இயல்:இல்லறவியல்