குறள்: 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு.
Who every good have killed, may yet destruction flee;Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit
| குறள் எண்: | 110 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | செய்ந்நன்றியறிதல் |
| இயல்: | இல்லறவியல் |