குறள்: 11வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives

மு.வரதராசன் உரை

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

சாலமன் பாப்பையா உரை

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

கலைஞர் உரை

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது

Explanation

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia

Kural Info

குறள் எண்:11
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வான்சிறப்பு
இயல்:பாயிரவியல்