குறள்: 15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise

மு.வரதராசன் உரை

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

சாலமன் பாப்பையா உரை

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

கலைஞர் உரை

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

Explanation

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

Kural Info

குறள் எண்:15
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வான்சிறப்பு
இயல்:பாயிரவியல்