குறள்: 16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.

If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head

மு.வரதராசன் உரை

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

சாலமன் பாப்பையா உரை

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்

கலைஞர் உரை

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

Explanation

If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen

Kural Info

குறள் எண்:16
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வான்சிறப்பு
இயல்:பாயிரவியல்