குறள்: 18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
| குறள் எண்: | 18 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | வான்சிறப்பு |
| இயல்: | பாயிரவியல் |