குறள்: 52மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.

If household excellence be wanting in the wife,Howe'er with splendour lived, all worthless is the life

மு.வரதராசன் உரை

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

கலைஞர் உரை

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

Explanation

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing

Kural Info

குறள் எண்:52
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம்
இயல்:இல்லறவியல்