குறள்: 55தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.
No God adoring, low she bends before her lord;Then rising, serves: the rain falls instant at her word
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain
| குறள் எண்: | 55 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | வாழ்க்கைத் துணைநலம் |
| இயல்: | இல்லறவியல் |