குறள்: 59புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.

Who have not spouses that in virtue's praise delight,They lion-like can never walk in scorner's sight

மு.வரதராசன் உரை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

சாலமன் பாப்பையா உரை

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் உரை

புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

Explanation

The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them

Kural Info

குறள் எண்:59
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாழ்க்கைத் துணைநலம்
இயல்:இல்லறவியல்