குறள்: 1262இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து.

O thou with gleaming jewels decked, could I forget for this one day,Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away

மு.வரதராசன் உரை

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

சாலமன் பாப்பையா உரை

ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

கலைஞர் உரை

காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி

Explanation

O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose

Kural Info

குறள் எண்:1262
Category:காமத்துப்பால்
அதிகாரம்:அவர்வயின் விதும்பல்
இயல்:கற்பியல்