குறள்: 1264கூடிய காமம் பிர஧ந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.

'He comes again, who left my side, and I shall taste love's joy,'-My heart with rapture swells, when thoughts like these my mind employ

மு.வரதராசன் உரை

முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.

கலைஞர் உரை

காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது

Explanation

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love

Kural Info

குறள் எண்:1264
Category:காமத்துப்பால்
அதிகாரம்:அவர்வயின் விதும்பல்
இயல்:கற்பியல்