குறள்: 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்கும்என் மென்தோள் பசப்பு.
O let me see my spouse again and sate these longing eyes!That instant from my wasted frame all pallor flies
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders
| குறள் எண்: | 1265 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | அவர்வயின் விதும்பல் |
| இயல்: | கற்பியல் |