குறள்: 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

One day will seem like seven to those who watch and yearnFor that glad day when wanderers from afar return

மு.வரதராசன் உரை

தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.

சாலமன் பாப்பையா உரை

தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.

கலைஞர் உரை

நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்

Explanation

To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days

Kural Info

குறள் எண்:1269
Category:காமத்துப்பால்
அதிகாரம்:அவர்வயின் விதும்பல்
இயல்:கற்பியல்