குறள்: 1271கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,Something, I know not, what, would utter of complaint

மு.வரதராசன் உரை

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை

நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

கலைஞர் உரை

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்

Explanation

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something

Kural Info

குறள் எண்:1271
Category:காமத்துப்பால்
அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல்
இயல்:கற்பியல்