குறள்: 1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.

While lovingly embracing me, his heart is only grieved:It makes me think that I again shall live of love bereaved

மு.வரதராசன் உரை

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

கலைஞர் உரை

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே

Explanation

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love

Kural Info

குறள் எண்:1276
Category:காமத்துப்பால்
அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல்
இயல்:கற்பியல்