குறள்: 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று.
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,That many may see; it was surely some folly that over you stole
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது
O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them
| குறள் எண்: | 1112 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நலம் புனைந்து உரைத்தல் |
| இயல்: | களவியல் |