குறள்: 1116மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன்.
The stars perplexed are rushing wildly from their spheres;For like another moon this maiden's face appears
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance
| குறள் எண்: | 1116 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நலம் புனைந்து உரைத்தல் |
| இயல்: | களவியல் |