குறள்: 1120அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.

The flower of the sensitive plant, and the down on the swan's white breast,As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed

மு.வரதராசன் உரை

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

சாலமன் பாப்பையா உரை

உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.

கலைஞர் உரை

அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை

Explanation

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji

Kural Info

குறள் எண்:1120
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நலம் புனைந்து உரைத்தல்
இயல்:களவியல்