குறள்: 1245செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.

O heart, as a foe, can I abandon utterlyHim who, though I long for him, longs not for me

மு.வரதராசன் உரை

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

கலைஞர் உரை

நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

Explanation

O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?

Kural Info

குறள் எண்:1245
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நெஞ்சொடு கிளத்தல்
இயல்:கற்பியல்