குறள்: 1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.

From thought of her unfailing gladness springs,Sweeter than palm-rice wine the joy love brings

மு.வரதராசன் உரை

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை

முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

கலைஞர் உரை

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

Explanation

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight

Kural Info

குறள் எண்:1201
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நினைந்தவர் புலம்பல்
இயல்:கற்பியல்