குறள்: 1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்உற்றநாள் உள்ள உளேன்.

How live I yet? I live to ponder o'erThe days of bliss with him that are no more

மு.வரதராசன் உரை

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

சாலமன் பாப்பையா உரை

அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?

கலைஞர் உரை

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?

Explanation

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

Kural Info

குறள் எண்:1206
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நினைந்தவர் புலம்பல்
இயல்:கற்பியல்