குறள்: 1184உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு.

I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray

மு.வரதராசன் உரை

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

சாலமன் பாப்பையா உரை

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

கலைஞர் உரை

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

Explanation

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful

Kural Info

குறள் எண்:1184
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பசப்புறு பருவரல்
இயல்:கற்பியல்