குறள்: 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

I lay in his embrace, I turned unwittingly;Forthwith this hue, as you might grasp it, came on me

மு.வரதராசன் உரை

தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

சாலமன் பாப்பையா உரை

முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.

கலைஞர் உரை

தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!

Explanation

I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on

Kural Info

குறள் எண்:1187
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பசப்புறு பருவரல்
இயல்:கற்பியல்