குறள்: 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.
I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it
| குறள் எண்: | 1161 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | படர்மெலிந் திரங்கல் |
| இயல்: | கற்பியல் |