குறள்: 1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.

From thy regard all womankind Enjoys an equal grace;O thou of wandering fickle mind, I shrink from thine embrace

மு.வரதராசன் உரை

பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

சாலமன் பாப்பையா உரை

பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

கலைஞர் உரை

பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்

Explanation

You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace you

Kural Info

குறள் எண்:1311
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி நுணுக்கம்
இயல்:கற்பியல்