குறள்: 1314யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.
'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'What all, what all?' she instant cried; And all her anger woke
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky
| குறள் எண்: | 1314 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | புலவி நுணுக்கம் |
| இயல்: | கற்பியல் |