குறள்: 1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி.
The bliss to be beloved by those they love who gains,Of love the stoneless, luscious fruit obtains
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.
தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்
The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?
| குறள் எண்: | 1191 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தனிப்படர் மிகுதி |
| இயல்: | கற்பியல் |