குறள்: 1198வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்.
Who hear from lover's lips no pleasant word from day to day,Yet in the world live out their life,- no braver souls than they
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.
பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது
There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved
| குறள் எண்: | 1198 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தனிப்படர் மிகுதி |
| இயல்: | கற்பியல் |