குறள்: 1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.

When lover went, then faded all their wonted charms,And armlets' golden round slips off from these poor wasted arms

மு.வரதராசன் உரை

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை

அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

கலைஞர் உரை

பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக

Explanation

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose

Kural Info

குறள் எண்:1234
Category:காமத்துப்பால்
அதிகாரம்:உறுப்புநலன் அழிதல்
இயல்:கற்பியல்