குறள்: 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு.

The dimness of her eye felt sorrow now,Beholding what was done by that bright brow

மு.வரதராசன் உரை

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை

குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!

கலைஞர் உரை

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

Explanation

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

Kural Info

குறள் எண்:1240
Category:காமத்துப்பால்
அதிகாரம்:உறுப்புநலன் அழிதல்
இயல்:கற்பியல்